Monday, July 25, 2011

புற்றுநோய் வருவத்ற்கான காரணங்கள், வகைகள் மற்றும் சிகிச்சை முறைகள்

பேராசிரியர் சி.எம்.கே.ரெட்டி ஓர் இணையத்தில் எழுதி வெளியிட்ட  மருத்துவக் கட்டுரை
புற்று நோய் – ‘யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எப்போது வே ண்டுமானாலும் வரலாம்’ என்று பலரையும் பயமுறுத்திக் கொண் டிருக்கும் நோய் இது!
ஆனால் உண்மையில் இது பயப்பட வேண்டிய நோய் அல்ல. விழிப்புணர்வுடன் இருக்க வே ண்டிய நோய். தொடக்கத்திலே கண்டு பிடி த்தால் 95 சதவீதம் குணப் படுத்தி நிம்மதியாக வாழ முடியும். இந்த நோய்க்கு இப்போது வியக்க வைக்கும் அள விற்கு நவீன நோய் கண்டு பிடிப்பு கருவிகளும், நவீன ஊசி மருந்துகளும் உள்ளன. அதனால் தரமான சிகிச்சையால் உயிர் பிழை த்து, நலமாக வாழ வாய் ப்பிருக்கிறது. ஆனால் அறிகுறிகளை அலட் சியப்படுத்திவிட்டு கண்டுகொள் ளாமலே இருந் தால் மட்டுந்தான் இது ஒரு ஆபத்தான நோயாக ஆகி விடுகிறது.
புற்று நோய்க்கு என்ன கார ணம்?
பல காரணங்கள் இருக்கின்றன. பாரம்பரியத்தாலும் வரும். பழக்கவழக்கங்களாலும் வரும். உணவாலும் வரும். அதிகமாக உடலில்படும் சூரிய ஒளியாலும் வரும். ஆண்களுக்கென்று சில புற்றுநோய்களும், பெண்களுக்கென்று சில புற்றுநோய்களும், இருபாலருக்கும் என்று பொதுவான புற்றுநோய்களும் உண்டு. ஜீரண குடல் புற்றும், விரைப் பகுதி புற்றும் ஆண்களுக்கு அதிகம் வருகின்றன. மார்பு புற்றும், தைராய்டு புற்றும் பெண்களுக்கு அதிகம் வருகிறது.
இந்த நோய்க்கான அறிகுறிகள் என் னென்ன?
உடலில் எந்த பகுதியிலும் இந்த நோய் வரலாம். எந்த இடத்தில் வருகிறதோ அது அதற்கென்று தனித்தனி அறிகுறி கள் இருக்கின்றன. நுரையீரலில் ஒரு அறிகுறி. ஈரலில் இன்னொரு அறிகுறி. இப்படி இடத்திற்கு தக்கபடி அறிகு றிகள் மாறும். ஆயினும் பொதுவாக 10 அறிகுறிகள் உள்ளன.
அவை:
குணமாகாத புண். ரத்த வாந்தி அல்லது புறவழி ரத்தப்போக்கு. சளியில் ரத்தம் வெளிப்படுதல். கட்டி பெரிதாகிக் கொண்டே இருப்பது. மச்சத்தில் அரிப்பு அல்லது ரத்தக் கசிவு ஏற்படுதல். கழுத்துப் பகுதியில் ஏற்படும் வலியற்ற வீக்கம். திடீரென ஏற்படும் எடை குறைவு, காய்ச்சல். (குறிப்பாக 40 வயதுக்கு மேற் பட்ட பெண்களுக்கு) மார்பில் வலியற்ற கட்டி தோன்றுதல். உண வை விழுங்கு வதில் ஏற்படும் சிரமம். திடீரென்று தோன்றும் அதிக மலச் சிக்கல்.
எந்தெந்த பகுதியில் ஏற்படும் புற்று நோய்க்கு என்னென்ன காரணங்கள்?
வாய் புற்று: புகைப் பிடித்தல், புகை யிலை மெல்லுதல், பான்- ஜர்தா போன்ற வை மெல்லுதல், முறையான பல் பராமரிப்பு இல்லாமை.
நுரையீரல் புற்று: புகைப் பிடித்தல், ஆஸ்பெட்டாஸ்- சிலிக்கான் தொழிற் சாலைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு.
வயிற்றுப் புற்று: மது அருந் துதல், புகைப்பிடித்தல், வறுத் த- பொரித்த- உணவுகளை அதிக அளவு சாப்பி டும் முறையற்ற உணவுப் பழக்கம்.
ஈரல் புற்று: மது அருந்துதல் மற் றும் வைரஸ் தொற்று.
மார்புப் புற்று: குழந்தையில்லா மை, ஒரு குழந்தை மட்டும் பெற்றெடுத்தல், தாய்ப்பால் புகட்டாமை, குண்டான உடல்வாகு.
கருப்பை புற்று: அதிகமாக குழந்தை பெற்றெடுத்தல், எச்.பி.வி.வைரஸ் தொற்று. (எச்.பி.வி. வைரஸ் தொற்று ஏற்பட்டு இந்த புற்றுநோய் உருவாகாமல் இரு க்க தடுப்பு ஊசி மருந்து கண்டு பிடிக்கப்பட்டுவிட்டது. வெளி நாடு களில் இப்போது பயன்படுத்தப்பட் டுக் கொண்டிருக்கிறது.)
சரும புற்று: சருமத்தில் அதிக அளவு வெயில்படுதல், சொரியா சிஸ் போன்ற சில வகை தோல் நோய்கள், நாள்பட்ட ஆறாத புண்.
(இந்தெந்த புற்றுநோய்க்கு இவை கள் காரணங்கள் என்று சொல்ல ப்பட்டாலும், பிரச்சினைக்குரிய பழக்கமே இல் லாத ஒருவருக்கு கூட இந்த நோய் ஏற்படலாம். ‘மது அருந்தமாட்டார். புகைப் பிடிக்கவும் மாட்டார். அவருக்கு வயிற்று புற்றுநோய் வந்து விட்டதே’ என்று வருந்திப்பயனி ல்லை. முற்றிலும் மாறுபட்ட இதர காரணங்களால் அவருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.)
இந்த புற்றுநோய்களை தடுக்க முடியுமா?
தடுக்க முயற்சிக்கலாம். மேற் கண்ட பழக்க வழக்கங்கள் இல் லாமல் இரு ந்தால் முடிந்த அளவு தடு க்கலாம்தானே! குறிப்பிட்டுச் சொ ல்ல வேண்டும் என்றால் புகையிலை, மது, புகைப்பிடித்தல், பான்பராக் பயன் படுத்துதல் போன்றவைகளை தவிர்த்திடுங்கள். முடிந்த அளவு தவிர் த்திட முடியும்.
‘ஹியூமன் பபிலோமாவைரஸ்’ (Human Papilloma Virus – HPV) மூலம் கருப்பை புற்றுநோய், ஆண்குறி புற்றுநோய் ஏற்படு கிறது. இவை களை தடுப்பதற்கு தேவையான தடுப்பூசி மருந் துகள் உள்ளன. அவைகளை பயன்படுத்திக் கொள் ளலாம்.
நோய் தாக்கியிருப்பதை எத்த கைய சோதனை மூலம் கண் டறிய முடியும்?
முதலில் நாம் குறிப்பிட்டிருக் கும் 10 அறிகுறிகளில் ஏதாவது ஒன்று தென்பட்டால் உடனே டாக்டரிடம் சென்றுவிடவேண்டும். ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், சி.டி- எம்.ஆர்.ஐ. ஸ்கேன்கள், என்டோஸ்கோபி அல்லது ஐசோடோபிக் ஸ்கேன்கள் போன்றவை களில் உங்க ளுக்கு எந்த மாதிரியான பரி சோதனை தே வை என் பதை டாக்டர் சொ ல்வார். அதை வைத்து நோயை கண் டறிவார். ஆனால் பயா ப்ஸி மூலமே நூறு சதவீதம் கண்டறிய முடி யும்.
சரி கண்டுபிடி த்து விட்டால், குணப்படுத்திவிட முடியுமா?
ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்துவிட்டால் 95 சதவீதம் குணப் படுத்திவிடலாம். இதற்காக தொடக்க காலத்திலே அறிகுறிகளை கண்ட றிய வேண்டும். முற்றிய நிலை என்றால் குண ப்படுத்துவது கடினம். இதில் மகிழ்ச்சி க்குரிய விஷயம் என்னவெ ன்றால் சில வகை புற்று நோய்கள் எந்த வயதில் வந்தாலும், குணப் படுத்த அதிக வாய்ப் பிருக்கிறது. இதற்கு ‘பெட்டன்சியலி க்யூரபுள் கேன் சர்’ என்று பெயர். சில வகை ரத்த புற்று, நெரி கட்டுவதில் ஏற் படும் புற்று, ஆண் உறுப்பில் பிராஸ்டேட் சுரப்பி அருகில் தோன்றும் புற்று போன்றவை இந்த வகையை சார்ந் ததாகும்.
புற்றுநோயை குணப்படுத்த ஆபரேஷன் செய்துகொள்வது அவ் வளவு நல்லதில்லை என்பது சரியா?
காலம் மாறிக்கொண்டிருக்கி றது. நவீன ஆபரேஷன் முறை களும்- கருவிகளும் வந்துகொ ண்டிருக்கின்றன. மருத்துவ நிபு ணர்களும் உருவாகிக் கொண் டிருக்கிறார்கள். 30, 40 வருடங் களுக்கு முன்னால் புற்று நோய் க்கு ‘மேஜர்’ ஆபரேஷன்கள் செய்யப்பட்டுக் கொண்டிருந் தன. இப்போது ‘சிம்பிளான’ ஆபரேஷன்கள் செய்து, நவீன மருந்து- நவீன தெரபிகள் கொடுக் கப்படுகிறது. ஆனாலும் மற்ற நோய்களுக்கான ஆபரேஷன் களோடு ஒப்பிடும்போது புற்று நோய் க்கான ஆப ரேஷன் சற்று ‘ரிஸ்க்’ தான். இருந்தாலு ம் பயப்பட வேண்டியதில்லை.
புற்றுநோய்க்கு இருக்கும் சிகிச்சை கள் என்னென்ன?
மூன்றுவிதமான சிகிச்சைகள் கை யாளப் படுகின்றன.
அவை:
1. ஆபரேஷன்
2. கீமோ தெரபி (மெடிக்கல் ட்ரீட் மென்ட்)
3. ரேடியேஷன் (எக்ஸ்-ரே ட்ரீட்மென்ட்)


Thursday, July 21, 2011

பல வியாதிகளை தண்ணீரால் குணப்படுத்தலாம்

தினமும் அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது இப்போது பிரபலமாகி வருகிறது.

1. காலையில் எழுந்ததும் பல் துலக்கும் முன்பே 4 x 160ml டம்ளர் தண்ணீர் அருந்துங்கள்.

2. பல் துலக்கி வாய் அலம்பிய பின் 45 நிமிடங்களுக்கு உணவோ, நீராகாரம் எதுவாயினும் உட்கொள்ளக் கூடாது.

3. 45 நிமிடங்களுக்குப் பின் வழமையான உங்கள் உணவை உட்கொள்ளலாம்.

4. காலை உணவின் பின் 15 நிமிடங்களுக்கும், மதிய மற்றும் இரவு உணவின் போது 2 மணி நேரங்களுக்கும் எதுவும் உட்கொள்ள வேண்டாம்.

5. முதியோர், நோயாளிகள் மற்றும் 4 டம்ளர் நீரை எடுத்த எடுப்பிலேயே அருந்த முடியாதவர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் உட்கொண்டு நாளடைவில் 4 டம்ளர் அளவு நீர் அருந்த பழகலாம்.

மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றும் நோயாளிகள் தமது நோய் நீங்கி சுகமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கியமான வாழ்கையை சந்தோஷிக்கலாம். எந்த நோய்க்கு எத்தனை நாட்கள் இந்த முறையை பின்பற்ற வேண்டும் என்ற விபரங்கள் பின்வருமாறு:

உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்கள்.

வாய்வுக் கோளாறுகள் - 10 நாட்கள்.

சர்க்கரை வியாதி - 30 நாட்கள்.

புற்றுநோய் - 180 நாட்கள்.

காசநோய் - 90 நாட்கள்.                                                                                                             நன்றி: என் கண்மணி