Showing posts with label வன்புணர்ச்சி. Show all posts
Showing posts with label வன்புணர்ச்சி. Show all posts

Tuesday, January 29, 2013

நாடா இல்லை வெறும் காடா?





ஒரு பெண்ணை வன்புணர்ச்சி செய்த அல்லது தூண்டும் மனித மிருகத்துக்கு தண்டனை  நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது  

அதனை தெரிந்து கொள்ளுங்கள்
சீனாவில்,நீதி விசாரணையின்போது குற்ற‍ம் நிரூபி க்கப்பட்டால் 
வன்கொடுமை புரிந்தவனுக்கு நேரடியாக மரண தண்டனையை நிறை வேற்றி விடுவார்கள்
மலேசியாவில்,குற்றவாளியை மரணதண்டனை கொடுத்து அவனை கொன்றுவிடுவார்கள்.
யுனைடெட் அரபு எமிரேட்டில், ஏழு நாட்களுக்குள் விசாரித்து குற்றவாளியை 
தூக்கில் தொங்க விட்டு மரண தண்டனையை நிறைவேற்று வார்கள்.
ஈரானில்,வன்கொடுமை புரிந்த குற்றவாளி என்று உறுதியானதும் அடுத்த‍ 24 மணி நேரத்திற்க்குள்,
அவனை கற்களால் தாக்கியும் அவனுக்கு பொது இடத் தினில் தூக்குத் தண்டனையையும் நிறைவேற்றுவார்கள்.
ஆப்கானிஸ்தானில்,வன்கொடுமை குற்றவாளியை பொது இடத்தில் அவனை தூக்கி லிட்டு, 
அவனது தலையில் துப்பாக்கியால் சுட்டு கொடூரமாக தண்டிக்க‍ப்படுவார்கள்.
மங்கோலியாவில்,இந்த வன்கொடுமைக்கு ஆளாகி தனது வாழ்க்கை இழந்த‌
அந்த பாதிக்க‍ப்பட்ட‍ அப்பாவிப் பெண்ணின் மூலமாகவே
அவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. 
ஈராக்கில்,வன்கொடுமை குற்றவாளியை அவன் கடைசி மூச்சு இருக்கும் வரை
அவனை கல்லால் அடித்தே கொல்லப்படும் தண்டனையை நிறைவேற்றுகிறார்க‌ள். .
தாலிபானில்,வன்கொடுமை குற்றவாளியின் கால்வேறு கைவேறு என்று ஒவ்வொரு உறுப்பாக வெட்டி எடுத்தும்,
கல்லால் அடித்தும் கடைசியில் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்படும் தண்ட னை உண்டு.
இன்னும் பல நாடுகளில்
பெண்களுக்கு எதிராக குற்ற‍ம் புரிபவர்களுக்கு உடனடியாக கொடூரமான தண்டனை விதிக்க‍ப்பட்டு வருகிறது.ஆனால்,
நம் இந்தியாவில் மட்டும் பல பெண்கள் இயக்கமும்,மனித உரிமை கழகமும்,
பொது மக்களும் போராட்டம் செய்தால்தான் கைதே செய்வார்கள் குற்றவாளியை  
நம் ஊர் காவல்துறை பிறகு,குற்றவாளிக்கு
குறிப்பிட்ட‍ வருடங்கள் வரை சிறைத் தண்டனை என்னும் பெயரில்  24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பும். 
தினந்தோறும் வேளை தவறாமல் நல்ல‍ சாப்பாடும் அரசாங்கம் வழங்கி வருகிறது.
அப்புறம் நம் நாட்டில் குறைந்து விடும்தானே பெண்கள் மீதான வன்புணர் கொடுமை???????